கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் எமதூரில் பலத்த அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான எனது சில கருத்துகளைத் தெரிவிப்பது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

நூர்தீன் சாச்சாவும் கொல்லப்பட்டார். எனது உம்மாவின் மாமாவான அப்பாஸ் ஆலிம் இன் மகன் ஹுசைனியாத் தைக்காவின் முன்னால் வீடு. எனது முழுக் குடும்பத்திலும் அன்றைய திகதிக்கு ஒரே பட்டதாரி. யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். ஒரு ஆசிரியராகப் பணியாற்றியதால், சிறுவனான என்னிடம் அடிக்கடி படிப்பின் அவசியம் பற்றிப் பேசுவார்.
எதை எழுதுவதென்று தெரியாமல் இப்பத்தி அலைபாய்வது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். என்னால் முடியவில்லை. மீண்டும் மீண்டும் என் சமூகத்தின் முகத்தில் குத்தாணிகளால் இழைக்கப்படும் அநியாய வடுக்களைப் பார்த்து அழும் என் கையறு நிலையைப் பார்த்து சுயவெறுப்பும் விரக்தியும் மிஞ்சுகின்றன.
எங்கள் குடும்பத்துக்கு படுவான்கரையில் வயல் உன்றிருந்தது. கொட்டாண்ட பங்கு என அழைக்கப்படும் பிரந்தியத்தில் அது இருந்ததாக அறிந்திருந்தேன். எனது வாழ்நாளில் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் குடும்பத்தின் கஷ;ட நிலையால் அதை விற்றுத் தின்றும் ஆகி விட்டது. எனது வாப்பா கூட ஓரிரு தடவைகள்தான் அங்கு சென்றதாகக் கூறினர். எனது மகள் யுஸ்ரி படுவான்கரையைப் போய்ப் பார்க்க முடியும் என்று உங்களில் எவருக்காவது சொல்ல முடியுமா? எனக்குத் தெரியவில்லை.
அசரீரி ஒரு கவிதையில் சொல்லியிருந்தார்:
இனி வேறென்ன..இருப்பும் உரிமையும் கோசமும் பணியாரமும்
அவர்களைநீளமாய்த் தோண்டச் சொல்லுங்கள்நம்மெல்லாருக்குமான மொத்தமான கபுறொன்றை
கிழக்கின் ஆறையும் கடலையும் தொங்கலாகக் கொண்ட நீளத்தில்
உண்மையாய்ப் போய் விடுமோ என்ற பயம் இருக்கிறது.
சற்றே நீண்ட இடைவெளியின் பின் உங்களுடன் சொல்லாடுவதில் மகிழ்ச்சி.
யாரையும் போலவே, நானும் எனது கை மண் அளவுக் கல்விக்காய் இன்னும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.
எனது கல்விப் பாதையின் மைல் கற்களை உங்களுக்காய் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.
ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை வகுப்புகளில் முதல் 10 இடங்களுக்குள் எனது தரம் அலைந்திருந்தது. பத்துக்கு மேல் வந்ததாய் நினைவில்லை.
பாடசாலைகள்:
காத்தான்குடி - மெத்தைப் பள்ளி வித்தியாலயம் (தரம் 1 - 3)
காத்தான்குடி - மீரா பாலிகா மகா வித்தியாலயம் (தரம் 4 - 5)
காத்தான்குடி - மத்திய மகா வித்தியாலயம் (தரம் 6 - 9)
சம்மாந்துறை - முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தரம் 9 - சா. த. பரீட்சை)
கல்முனை - சாஹிறாக் கல்லூரி (க.பொ.த. உயர்தரம்)
தொடர்ந்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவாகி பின்னர் காத்திருப்புப் பட்டியலில் விவசாய பீடத்தில் இடம் கிடைத்தது. மருத்துவ பீடக் கனவுகளை ஊரிலேயே புதைத்து விட்டு நண்பர் அதீக் சம்சுதீனும் நானும் தினமும் காத்தான்குடி - கொழும்பு நகர்சேர் பேரூந்தைப் பிடித்து வகுப்புகளுக்குப் போய்ச் சேர்வோம்.
வேலைக்கும் போய்க் கொண்டிருந்த படியால் வகுப்புகள் அடிபடுவதும், வீட்டுக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் ஓடி வகுப்புகளை இறுதி நிமிடங்களில் பிடிப்பதும் வாடிக்கையாகிப் போனது.
ஒருவாறாக 2003ம் ஆண்டு நடுப்பகுதியில் பட்டப்படிப்பு முடிந்து விட்டது. மேலும் சூழலின் போட்டி மிகுல்த தன்மையால் மேலும் படிக்க வேண்டும் என்ற சிந்தனை மிகைத்திருந்தது. விவசாயப் பட்டதாரிகட்கான வாய்ப்புகள் குறைவாகவே தென்பட்டதால், வழமையாக ஈடுபாடு கூடிய மற்றொரு துறையான கணினித் துறையின்பால் நகர்தல் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றியது.
இச்சமயத்தில்தான் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டப் பின் கற்கைகள் நிறுவகத்தால், கணினி விஞ்ஞான முதுமாணி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இறவனின் ஊதவியால் அதில் அனுமதியும் கிடைத்தது. ஏறத்தாழ இரு வருடங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்குப் பயணித்து பாடநெறியின் வகுப்புகள், பரீட்சைகள் பூர்த்தியடைந்தன. எனினும் புதிய துறையாகையால் ஆய்வு இன்னும் இரு வருடங்களை விழுங்கியது. ஒருவாறாக இவ்வருடம் மார்ச் மாதம்தான் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடிந்தது.
இப்பயணங்களிலும் படிப்பிலும் நண்பர்களான மன்சூர் காசிம் மற்றும் றாபி அப்துல் கரீம் (மருதமுனை) ஆகியோர் பெரிதும் இணைந்தேயிருந்தனர். நண்பர் றிசாத், இறக்காமத்திலிருந்து பயணித்த படியால் கண்டியில் இணைந்து கொள்வார்.
தற்போது தொழில் நிமித்தம் தேவையிருப்பதால், சிஸ்கோ நிறுவனத்தின் கணினி வலையமைப்புச் சான்றிதழான CCNA பரீட்சைக்கான ஆயத்தங்களை கடந்த வாரம் முதல் ஆரம்பித்திருக்கின்றேன்.
ஏதாவது ஒரு துறையில் கலாநிதி வரை செல்ல வேண்டும் என்பதும், பல்கலைக் கழகம் ஒன்றில் பணியாற்ற வேண்டும் என்பதும் நீண்ட நாள் ஆசை. அமைப்பிருந்தால் பார்க்கலாம்.
நினைவில் நிலைத்திருக்கும் ஆசிரியர்கள்:
முஸலிம் பாலர் பாடசாலை ஆசிரியையான லத்தீபா டீச்சர்
ஆரம்ப வகுப்புகளில் வகுப்பாசிரியையான ஜெஸீமா முகைதீன் டீச்சர்
தரம் 6 கணித ஆசிரியரான நவரத்தினராஜா (நவம்) சேர் ஆரைப்பற்றையைச் சேர்ந்தவர்
ஆரம்ப ஆங்கில ஆசிரியரான லியோன் சேர் (மட்டக்களப்பு)
தரம் 5 தெடக்கம் 9 ஆங்கில ஆசிரியையான மர்ழியா முனீர் டீச்சர்
தரம் 7, 8 தமிழாசிரியரான ஹமீத் சேர்
தரம் 7, 8 ஆங்கில ஆசிரியரான அமீரலி சேர்
தரம் 7, 8 கணித ஆசிரியர்களான பாரி சேர் மற்றும் எம். சீ. எம். முஸ்தபா சேர்
தரம் 7, 8 விஞ்ஞான ஆசிரியரான நசார் சேர்
தரம் 9 தமிழசிரையான நபீசா டீச்சர் (சம்மாந்துறை)
தரம் 9, 10 ஆங்கில ஆசிரியையான ரெனூபா இஸ்மாயில் டீச்சர் (சம்மாந்துறை)
தரம் 9, 10 கணித ஆசிரியர்களான மஜீத் சேர் (சம்மாந்துறை) மற்றும் ஜௌபர் சேர் (சம்மாந்துறை)
தரம் 9, 10 விஞ்ஞான ஆசிரயரான சிறாஜ்தீன் சேர் (சம்மாந்துறை)
உயர்தர விலங்கியல் ஆசிரியரான கே. எம். மன்சூர் சேர் (அக்கரைப்பற்று), ஈஸ்வரி (ஈச்சா) டீச்சர் (மட்டக்களப்பு)
உயர்தர தாவரவியல் ஆசிரயர்களான உவைஸ் சேர் (மருதமுனை), அஸ்ஹர் சேர் (கல்முனை), அன்புதீன் சேர் (கல்முனை), குணம் சேர் (மட்டக்களப்பு)
உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களான அன்சார் சேர், இஸ்மாயில் சேர் (கல்முனை), கோவிந்தராஜா சேர் (மட்டக்களப்பு)
உயர்தர இரசாயனவியல் ஆசிரியர்களான சீ. எம். எம. மன்சூர் சேர், முபாறக் சேர் (நிந்தவூர்), பசீல் சேர் (கல்முனை), சனூஸ் காரியப்பர் சேர் (கல்முனை), றிஸ்வான் சேர் (கல்முனை), சாபி ஜமால்தீன் சேர் (அக்கரைப்பற்று)
விரிவுரையாளர்கள் - கிழக்குப் பல்கலைக்கழகம்
விவசாய இரசாயன சிரேஷட விரிவுரையாளரும், எனது ஆய்வு மேற்பார்வையாளருமான கலாநிதி. தேவகி மகேந்திரன் அவர்கள் (யாழ்ப்பாணம்)
விவசாய இரசாயன சிரேஷட விரிவுரையாளரும், ஆய்வுக்கான கற்கைகளில் முக்கிய பங்கு கொண்டதோடு பல நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கியவருமான தற்போதைய
விவசாய பீடாதிபதி கலாநிதி. பிரேமகுமார் அவர்கள் (நாவற்குடா)
முன்னாள் விவசாய பீடாதிபதியும் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்தபோது கடத்தப்பட்டு காணாமல் போன எப்போதும் மாணவர் நலனை முன்னிறுத்தி சேவையாற்றியதோடு நட்புறவோடு பழகியவருமான பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்கள் (யாழ்ப்பாணம்)
பயிர்த் தாவரவியல் விரிவுரையாளரும் முதல் வருடத்தின் போது எனது கல்வியில் பல வகையான பெரும் உதவிகளைப் புரிந்தவருமான தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிசாகரன் அவர்கள் (களுவாஞ்சிகுடி)
மேலும் எனது மதிப்புக்குரிய விரிவுரையாளர்களாகிய பின்வருவோர்:
தாவர உடற்றொழிலியல் விரிவுரையாளர் மகேந்திரன் அவர்கள்
விவசாய எந்திரவியல் விரிவுரையாளர் கலாநிதி திருச்செல்வம் அவர்கள்
பயிர் விஞ்ஞான விரிவுரையாளர் குமாரகுணரத்தினம் அவர்கள்
உயிர்த் தொழிநுட்பவியல் விரிவுரையாளர் சுரேஸ் சுந்தர் அவர்கள்
இவ்வலையோலையின் பாகம் 2 விரைவில் வரும் .......
